Tuesday, March 1, 2016

ஹோமாகம சம்பவம்; 6 தேரர்கள், பெண் ஒருவர் உள்ளிட்ட 11 பேருக்கு பிணை



ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் குழப்பநிலையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 பிக்குகள், ஒரு பெண் உட்பட 11 பேரையும் மஹரகம நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று பிணையில் விடுதலை செய்துள்ளார்.

சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

ராவணா பலய அமைப்பின் அமைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், முன்னாள் எம்.பியான ஹக்மீமன தயாரத்ன தேரர்கள் உள்ளிட்டோர், கடந்த 15ஆம் திகதி பொலிஸில் சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Share:

0 comments:

Post a Comment

Text Ad

Blog Archive

Recent Posts

Unordered List

Pages

Theme Support